tamilnadu

img

நான் உங்க கழிப்பறையை சுத்தம் செய்ய எம்.பி. ஆகல!

போபால்:
ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்சாமியார் பிரக்யா சிங் தாக்குர். பிறமதவெறுப்புப் பேச்சுக்களுக்கும், வன்மத்திற்கும் பெயர்போனவர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதியாக குற்றம்சாட்டப்பட்டு, நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட பிரக்யா சிங், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜாமீனில் வெளியேவந்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரை எம்.பி.யாகவும் பாஜக ஆக்கியது.

இந்நிலையில், போபால் தொகுதிக்கு உட்பட்ட பாஜக தொண்டர் ஒருவர், அண்மையில் பிரக்யாவுக்கு போன் செய்து தனதுபகுதியில் சுகாதாரத்தின் நிலை மிக மோசமாக உள்ளது என்று கூறியதாகத் தெரிகிறது. இதனை நினைவில் வைத்துக் கொண்ட, பிரக்யா சிங் அண்மையில் செஹோர் பகுதி பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது, “நான் எம்.பி.-யாகதேர்ந்தெடுக்கப்பட்டது, உங்கள் கழிப்பறையையும், சாக்கடைக் கால்வாய்களையும் சுத்தம் செய்வதற்காக அல்ல; தயவுசெய்து அதைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள்” என்று ஆத்திரம் அடைந்துள்ளார். “உங்களின் குறைகளை உள்ளூர் பிரதிநிதிகளை வைத்து தீர்த்துக்கொள்ளுங்கள்; அதைவிடுத்து எனக்கு அடிக்கடி போன்செய்வதை இதோடு நிறுத்திக்கொள்ளுங் கள்” என்றும் கொதித்துள்ளார்.